Tuesday, April 08, 2014

மான் கராத்தே..!

மான் கராத்தே என்பது தற்காப்புக் கலையின் கடைசிப்படி. அனைத்து தற்காப்பு முயற்சிகளும் எதிரியிடம் பலிக்காத போது, மான் கராத்தே தான் கை கொடுக்கும். மான் கராத்தே அனைவருக்கும் கைவந்த தற்காப்பு கலைதான். ஏனைய தற்காப்பு கலைகள் போல இதற்கு விஷேட ஆற்றல்கள் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. கொஞ்சம் மெலிந்த , கால்கள் நீண்டவர்களுக்கு இத் தற்காப்பு கலை ஒரு வரப்பிரசாதம். 

அதோடு மற்ற தற்காப்புக் கலைகள் போல இதற்குரிய செய்ன்முறைகளும் கஷ்டமில்லை. எதிரியின் தாக்குதல் சமாளிக்க முடியமால் உக்கிரமாகும் போது, மான் கராத்தே கை கொடுக்கும். அதன் செயன்முறைகள் பின் வருமாறு,

1. நான்கைந்து அடிகள் பின்வாங்குங்கள்
2.செருப்பை கைகளில் எடுக்கமுடியுமானால் சிறப்பு
3.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்... 

கை கொடுங்கள்... மான் கராத்தே வில் நீங்கள் கை தேர்ந்துவிட்டீர்கள்

பின் குறிப்பு (1): இதில், 2 செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அது, அனுபவத்தில்தான் கைவரப் பெறும். நான்கு ஐந்து முறை மான் கராத்தே வினை பிரயோகிகும் போதுதான் இது உங்களுக்கு கைகூடும். ஆகவே செருப்பை எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு மான் கராத்தே கைகூட நாளாகலாம்.


பின் குறிப்பு (2) : நீங்க சிவ கார்த்திகேயனை தேடி வந்திருந்தீங்கன்னா அதுக்கு கம்பனி பொறுப்பேற்காது.. சாரி...

1 comment:

Jay said...

என்னா ஒரு வில்லத்தனம்?